மகசீன் சிறைச்சாலையில் இட நெருக்கடி

504 0

New-Magazine-Prison_1அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்களை மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ளதால் அங்கு இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மகசீன் சிறைச்சாலையில் 600பேரையே தடுத்து வைத்திருக்கமுடியும் என்ற போதிலும் அங்கே 1114பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய அதிகாரிகள் கைதுசெய்யப்படும்போது அவர்களது பாதுகாப்புக் கருதி அவர்கள் தனிச் சிறைகளில் அடைத்து வைக்கப்படுகின்றனர். இவ்வாறு செய்வதால் சிறைச்சாலையில் மேலும் இடநெரிசல்கள் ஏற்பட்டுள்ளது எனவும் எதிர்காலத்தில் இன்னும் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதய கம்மின்பல மற்றும் முசமில் ஆகியோரும் மகசீன் சிறைச்சாலையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வெலிக்கடைச் சிறைச்சாலையில் 1600 கைதிகளையே தடுத்துவைக்கமுடியும் என்றபோதிலும் 2900 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் குறித்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a comment