கட்சியையும், ஆட்சியையும் தினகரன் கைப்பற்றுவார்: தங்க தமிழ்செல்வன்

272 0

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கட்சியையும், ஆட்சியையும் தினகரன் கைப்பற்றுவார் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

டி.டி.வி. தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்செல்வன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே. நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் முறையாக செயல்படவில்லை. தேர்தல் அதிகாரி விஷால் மனுவை நிராகரிக்கிறார். பின்னர் ஏற்கிறார். அதன் பின்பு நிராகரிப்பு என்கிறார்.

தேர்தல் நியாயமாக நடைபெறுமா? எனும் சந்தேகம் மக்களிடம் உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையம் சின்னம் அறிவிக்கின்றது. எங்களுக்கு தொப்பி சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் தொப்பி சின்னத்திற்கு தடையில்லை என கூறியுள்ளது.

மத்திய அரசு, எடப்பாடி, ஓ.பி.எஸ். தமிழிசை ஆகியோர் ஏன் தொப்பியை கண்டு பயப்படுகிறார்கள்? நீங்கள் இரட்டை இலையில் போட்டியிடுங்கள். நாங்கள் தொப்பியில் போட்டியிடுகிறோம். யார் ஜெயிப்போம் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்?

எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தினகரன் கட்சியையும், ஆட்சியையும் கைபற்றுவார்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment