மாங்குளம் பொலிசாரினால் வாகனங்கள் மறித்து சோதனையிடும் நடவடிக்கை

335 0

மாங்குளம் பொலிசாரினால் நேற்றைய தினம் வாகனங்கள் மறித்து சோதனையிடும் நடவடிக்கை ஒன்று இடம்பெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அண்மைய காலங்களில் வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத தொழில்கள் கலாச்சார சீரழிவு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

அந்தவகையில் விசேடமாக போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் மாங்குளம் நகர்ப்பகுதியில் யாழ்ப்பாணம் இருந்து வவுனியா நோக்கி சென்ற அனைத்து பேருந்துகள் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி சோதனையிட்டதோடு பயணிகளின் பயணப்பைகளும் சோதனையிடப்பட்டது.

இந்தவகையில் அண்மையில் தொடர்ச்சியாக கஞ்சா உள்ளிட்டவை பொலிசாரிடம் மாட்டிவரும் நிலையில் இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. 

Leave a comment