கிளிநொச்சியில் சர்வதேச மாற்று திறனாளிகள் விழா

319 0

சர்வதேச மாற்று திறனாளிகள் விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கல்வி வலய விசேட கல்வி பிரிவும், டெப்லிங் நிறுவனமும் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு  நடை பயணம் கூட்டுறவு சபை மண்டபம் வரை சென்றது. தொடர்ந்து மாற்று திறனாளிகளின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டதை அடுத்து நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மெதடிஸ்த மிசன் திருச்சபையின் பேராயர் பேரருட் திரு ஆசிரி பெரேரா கலந்து கொண்டதுடன், அருட்தந்தையர்கள், கல்வி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment