உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில் மூன்றாம் கட்டப் பேச்சு!

2304 0

உள்ளூராட்சித் தேர்தலில் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான மூன்றாவது சுற்றுப்பேச்சு இன்று மாலை ஆரம்பமாகியுள்ளது. 

யாழ்ப்பாணம் மார்டீன் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் அந்தக் கட்சியின் செயலாளர் ஆர். துரைராஜசிங்கம் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறுகிறது.

தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, சிறிநேசன், சிவமோகன், துரைரட்ணசிங்கம், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பிரதி அவைத் தலைவர் கமலேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் த. குருகுலராசா, பா.சத்தியலிங்கன், பசுபதிப்பிள்ளை, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

புளொட் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், வடக்கு மாகாண அமைச்சர் க.சிவநேசன், கட்சியின் மூத்த உறுப்பினர்களான மோகன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ரெலோ சார்பில் அதன் செயலாளர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜனா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதாரலிங்கம் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

Leave a comment