கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் “தாவரவியல் பூங்கா” என நாட்டப்பட்ட பெயர்பலகை பிடிங்கி எறியப்பட்டது!

11726 58

கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் உத்தரவுக்கு அமையவே கரைச்சிப் பிரதேச சபையினால் தாரவியல் பூங்கா எனும் பெயர்ப்பலகை அங்கு நாட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினம் முடிந்த கையோடு அவசர அவசரமாக மாவீரர் துயிமில்லம் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டு பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் தமிழின உணர்வாளர்களால் பெயர்ப்பலகை இன்று பிடிங்கி எறியப்பட்டது.

Leave a comment