நாளை முதல் சாதாரண தர வகுப்புகளுக்கு தடை

249 0

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், தனியார் வகுப்புக்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் நாளை நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, இக் காலப் பகுதியில் மாதிரி வினாக்களை அச்சிடல் மற்றும் அது குறித்து கலந்துரையாடுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எதிர்வரும் 12ம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment