வங்காளதேசம்: திறந்தவெளியில் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை – 80 ஆயிரம் பேர் பங்கேற்பு

332 0

வங்காளதேசம் நாட்டுக்கு வந்துள்ள போப் பிரான்சிஸ் டாக்கா நகரில் உள்ள மிகப்பெரிய பூங்காவில் இன்று நடத்திய ஜெப கூட்டத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

மியான்மர் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து உள்நாட்டு கலவரத்தால் வங்காளதேசம் நாட்டுக்கு புலம்பெயர்ந்த ரோஹிங்கியா மக்கள் மீள்குடியேற்றம் தொடர்பாக அந்நாட்டு அரசுடன் ஆலோசனை செய்த போப் பிரான்சிஸ் நேற்று வங்காளதேசம் நாட்டுக்கு வந்தார்.

டாக்கா நகரில் உள்ள சுஹ்ராவார்டி உட்யன் பூங்காவில் இன்று மாபெரும் ஜெபக் கூட்டத்தை அவர் நடத்தினார். இந்த கூட்டத்தின்போது 16 பேரை பாதிரியார்களாக்கி ஆசீர்வதித்தார். இந்த ஜெப கூட்டத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இன்று மாலை முஸ்லிம், இந்து, புத்த, கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த மக்களுக்காக கூட்டுப் பிரார்த்தனை நடத்தும் போப் பிரான்சிஸ், அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் தலைவர்கள் சிலரை சந்தித்து பேசுகிறார். பின்னர், டாக்காவில் உள்ள வாட்டிகன் தூதரகத்தில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து ரோஹிங்கியா அகதிகளின் புணர்வாழ்வு தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment