வவுனியாவில் பற்றி எரிந்த வன்பொருள் அங்காடி நிலையம்!

526 0

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் 6ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள வன்பொருள் அங்காடி (ஹாட்வெயார்) ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் வேப்பங்குளத்திற்கு அருகில் உள்ள 6ஆம் கட்டையில் நேற்று இரவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த இடத்திற்கு தீயணைப்பு பிரிவின் வாகனம் ஒன்று வருகைத்தந்த போதும் குறித்த வண்டியில் தண்ணீர் இல்லை என தெரிவித்து அந்த வண்டி திரும்பிச் சென்றுள்ளது.

எனினும் சுமார் 30 நிமிடமாக வன்பொருள் அங்காடிதொடர்ந்து எரிந்ததாகவும், திரும்பிச் சென்ற வண்டியைத்தவிற வேறு எந்த தீயணைப்பு வண்டியும் குறித்த இடத்திற்கு வரவில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்தினார்கள்.

இந்த தீ விபத்தினால் பிரதான வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

Leave a comment