முப்பது வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று கிடக்கும் இருட்டுமடு பிரதான வீதி!

312 0
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருட்டுமடு-உடையார்கட்டு பிரதான வீதி மக்கள் பாவணைக்கு மிகவும் இடையூறாக முப்பது வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று கிடக்கின்றது.
பாடசாலை மாணவர்கள்,அரச அதிகாரிகள்,விவசாயிகள்,சாதாரண பொதுமக்கள் என நாளாந்தம் பல்வேறு தேவைக்காக மக்கள் பயன்படுத்தும் இவ் வீதியை பிரதேச அரசியல் வாதிகளோ,அதிகாரிகளோ சீர்செய்யாமல் இருக்கும் வரை இருட்டுமடு மக்களது நாளாந்த வாழ்க்கைமுறை மிகவும் துன்பம் நிறைந்ததாகவே இருக்கும் என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Leave a comment