சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 ரூபா நிதியுதவி – ரணில்

4624 32

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 ரூபா நிதியுதவியை இன்று முதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, தேசிய காப்புறுதி நிதியம் ஆகியவற்றுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதேவேளை, அனர்த்தம் காரணமாக சேதமடைந்துள்ள உடைமைகளின் பெறுமதியை அறிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பிரதமர் மூலம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment