இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு 50 மேலதிக அதிகாரிகள்

209 0

இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக 50 அதிகாரிகளை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க வினவிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே சபாநாயகர் கருஜயசூரிய இதனை குறிப்பிட்டார்.

அரசியல் பேரவையின் அனுமதியின் அடிப்படையில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment