பெற்றோலில் மண்ணென்ணெய்: எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சீல்

289 0

பெற்றோலில் மண்ணென்ணெய் கலந்து விற்றதாக கூறப்படும், நாஉன பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

அண்மையில், எரிபொருளில் மண்ணென்ணெய் கலந்து விற்கப்படுவதாக, நுகர்வோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, இந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, மண்ணென்ணெய் கலக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெற்றோலை கொழும்புக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்ட பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a comment