தமிழரசுக் கட்சி வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு ஆரம்பம்

255 0

எதிர்வரும் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு நேற்று முதல் இரண்டு மாவட்டங்களில் ஆரம்பமாகியுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 30ம் திகதி தொடர்ச்சியாக மூன்று நாட்கள், மன்னார் மற்றும் வவுனியாவிலுள்ள, அக் கட்சியின் அலுவலகத்தில் இந்த நேர்முகத் தேர்வுகள் இடம்பெறும்.

இதேவேளை, கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் கட்சி விடுத்த அறிவிப்புக்கு அமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட, வடக்கில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள், விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய, சுமார் இரண்டாயிரம் விண்ணப்பங்கள் இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ளதாக, அக் கட்சியின் வவுனியா செயற்குழு கூறியுள்ளது.

Leave a comment