பிரபாகரன் : ஆட்டிப்படைக்கும் ஆளுமை!

405 0

விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் 63 ஆவது பிறந்த நாள் இன்று.  இத்­த­கைய நிலையில், கடந்த 18ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் அமைச்­சரும் பீல்ட் மார்­ஷ­லு­மான சரத் பொன்­சேகா உரை­யாற்­றிய போது, வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னையும் தொட்டுச் சென்­றி­ருந்தார். அவ­ரது உரையின் முக்­கி­ய­மான பகுதி அது. 

“பிர­பா­க­ர­னிடம் தான், நாங்கள் போரைக் கற்றுக் கொண்டோம், பிர­பா­கரன் உரு­வா­கி­யதால் தான், பீல்ட் மார்ஷல் ஒரு­வரும் உரு­வானார்” என்று அவர் கூறி­யி­ருந்தார்.

2011ஆம் ஆண்டு ஒஸ்­லோவில் நடந்த ஒரு நிகழ்வில் உரை­யாற்­றிய, நோர்­வேயின், இலங்­கைக்­கான முன்னாள் சமா­தானத் தூதுவர் எரிக் சொல்­ஹெய்மும், அமெ­ரிக்­காவின் முன்னாள் உதவி இரா­ஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆர்­மி­ரேஜூம், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை ஒரு சிறந்த போரியல் வல்­லுனர் – இரா­ணுவ மேதை என்று குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

ஆனாலும், பிர­பா­க­ரனின் அர­சியல், இரா­ஜ­தந்­திர ஆளு­மையை அவர்கள் அந்­த­ள­வுக்கு சிறப்­பாக மதிப்­பிட்­டி­ருக்­க­வில்லை.  எனினும், விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின், போரியல் ஆளுமை என்­பது, எவ­ராலும் குறைத்து மதிப்­பிட முடி­யாத ஒன்­றா­கவே இருந்­தது என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா ஒன்றும் பிர­பா­க­ர­னுக்கு புக­ழாரம் சூட்­டு­வ­தற்­காக, பாரா­ளு­மன்­றத்தில் அந்தக் கருத்தைக் கூறி­யி­ருக்­க­வில்லை. அது பிர­பா­க­ரனின் போரியல் ஆளு­மையை வெளிப்­ப­டுத்தும், அங்­கீ­க­ரிக்கும் கருத்து என்­பதில் சந்­தே­க­மில்லை.

இன்று இலங்­கையின் முப்­ப­டை­களும் அதி­ந­வீன ஆயு­தங்கள், போர்த்­த­ள­வா­டங்­க­ளுடன் இருக்­கின்­றன என்றால், மூன்று இலட்சம் படை­யி­னரைக் கொண்­ட­தாக விளங்­கு­கி­றது என்றால், அதற்கு ஒரே காரணம் பிர­பா­கரன் தான்.

அதனால் தான், பிர­பா­க­ர­னிடம் தான் நாங்கள் போரைக் கற்றோம் என்று சரத் பொன்­சேகா கூறி­யி­ருந்தார்.

போர் தொடங்­கிய போது, வெறும் 10 ஆயிரம் படை­யி­னரே இலங்­கையில் இருந்­தனர். அப்­போது எந்த நவீன போர்த் தள­வா­டங்­களும் படை­யி­ன­ரிடம் கிடை­யாது. போருக்­கான ஆயத்­த­நி­லையும் இல்லை.

இருந்­தாலும், மர­புசார் பயிற்­சி­களைப் பெற்ற ஓர் இரா­ணுவம் இருந்­தது. அதனை எதிர்­கொண்டு தான் பிர­பா­கரன் தனது போர் ஆற்­றலை வளர்த்துக் கொண்டார்.

பிர­பா­கரன் எங்கும் போர்க்­க­லையைக் கற்­க­வில்லை. எந்த நாட்­டி­டமும் பயிற்­சி­களைப் பெற­வில்லை. ஆனாலும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவே, பிர­பா­க­ர­னிடம் தான் போரைக் கற்றுக் கொண்டோம் என்று கூறும் அள­வுக்கு அவ­ரது போர் ஆளுமை அமைந்­தி­ருந்­தது.

இலங்கை இரா­ணுவம் இப்­போது, உலகில் கவ­னிக்­கத்­தக்க ஓர் இரா­ணு­வ­மாக இருக்­கி­றது என்றால்,  இலங்கை இரா­ணு­வத்­திடம் போர் அனு­ப­வங்­க­ளையும் நுட்­பங்­க­ளையும் கற்­றுக்­கொள்ள பல நாடுகள் முற்­ப­டு­கின்­றன என்றால், அதற்கு ஒரே காரணம், பிர­பா­க­ரனின் போர் ஆளுமை மட்டும் தான்.

அந்த ஆளு­மையைத் தோற்­க­டித்த ஒரே கார­ணத்­தினால் தான், இலங்கை இரா­ணு­வத்­துக்கு இந்த மவுசும் மதிப்பும் கிடைத்­தது. வெளி­யு­லக ஆத­ரவு இல்­லாமல் ஒரு படைக்­கட்­ட­மைப்பை உரு­வாக்கி, சர்­வ­தே­சத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அள­வுக்கு அதனைக் கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருந்தார் பிர­பா­கரன். பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, போர் தொடங்கும் போது, வெறும் 10 ஆயிரம் படை­யினர் தான் இருந்­தனர். இப்­போ­துள்ள 3 இலட்சம் படை­யினர் இருந்­தி­ருந்தால், இரண்டு ஆண்­டு­களில் போரை முடி­வுக்குக் கொண்டு வந்­தி­ருப்போம் என்று கூறி­யி­ருக்­கிறார்.

இலங்கை இரா­ணு­வத்­துடன் போரைத் தொடங்­கிய போது, விடு­தலைப் புலி­களும் ஒன்றும் ஆயி­ரக்­க­ணக்­கான போரா­ளி­க­ளையோ, மிகப்­பெ­ரிய ஆயுத தள­வா­டங்­க­ளையோ, நவீன போர்க்­க­ரு­வி­க­ளையோ, சண்­டைப்­ப­ட­குகள், விமா­னங்­க­ளையோ கொண்­டி­ருக்­க­வில்லை.

ஐந்து பத்துப் பேரில் இருந்து தான், இரா­ணு­வத்­துக்கு எதி­ரான போர் புலி­களால் தொடங்­கப்­பட்­டது. குறைந்­த­ளவு போரா­ளி­களே இருந்­தாலும், இரா­ணு­வத்தின் செறிவு குறை­வாக இருந்­தமை, புலி­க­ளுக்குச் சாத­க­மாக இருந்­தி­ருக்­கலாம்.

அதனால் தான், இப்­போ­துள்ள படை­ப் பலம் இருந்­தி­ருந்தால் இரண்டு ஆண்­டு­களில் போரை முடித்­தி­ருக்­கலாம் என்று சரத் பொன்­சேகா கூறி­யி­ருக்­கிறார்.

எனினும், படை­பலம் மாத்­தி­ரமே, விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரை வெற்­றி­கொள்­வ­தற்கு சாத­க­மான அம்­ச­மாக இருந்­தது என்ற கருத்து ஏற்­பு­டை­ய­தல்ல. மூன்­றா­வது கட்ட ஈழப்­போரில் கூட, இரண்டு இலட்சம் படை­யி­ன­ருடன் தான் அர­சாங்கம் இருந்­தது.

ஆனாலும் புலி­களை அப்­போது தோற்­க­டிப்­ப­தற்­கான சூழலும், உத்­தி­களும் வாய்க்­க­வில்லை.

பிர­பா­க­ர­னிடம் இருந்து போரிடும் முறை­களை மாத்­திரம் இரா­ணுவம் கற்றுக் கொள்­ள­வில்லை. பல ஆயு­தங்­களின் அறி­மு­கமும்  கூட இரா­ணு­வத்­துக்கு புலி­களால் தான் கிடைத்­தி­ருந்­தது.

1985ஆம் ஆண்டு ஜன­வரி 9ஆம் திகதி, அச்­சு­வே­லியில் புலி­களின் முகாம் ஒன்றை இரா­ணு­வத்­தினர் சுற்­றி­வ­ளைத்­தனர். அது ஓர் ஆயுதக் களஞ்­சி­ய­மா­கவும் விளங்­கி­யது. அங்­கி­ருந்து தான், ஆர்.பி.ஜி என்ற ரொக்கட் லோஞ்சர் முதன்­மு­த­லாக இரா­ணு­வத்தின் கையில் கிடைத்­தது.

அதற்குப் பின்னர் அதே ஆர்.பி.ஜிகளை பெரு­ம­ளவில் இரா­ணுவம் வாங்கிக் குவித்­தது. அது­போல பல ஆயுத தள­வா­டங்­களை விடு­தலைப் புலிகள் போரில் அறி­மு­கப்­ப­டுத்­திய பின்­னரே, இரா­ணு­வத்­தினர் அதனை வாங்க முயன்­றனர்.

சாம் எனப்­படும் விமான எதிர்ப்பு ஏவு­க­ணை­க­ளையும் விடு­தலைப் புலி­க­ளுக்குப் பின்னர் தான் விமா­னப்­படை வாங்­கி­யது. பல்­குழல் பீரங்­கி­க­ளையும் விடு­தலைப் புலிகள் தான் முதன் முதலில் இலங்­கையில் பயன்­ப­டுத்தத் தொடங்­கினர்.

1999ஆம் ஆண்டு தொடக்­கத்தில் தள்­ளாடி படைத்­தளம் மீதான தாக்­கு­தலில் புலிகள் 12 குழல்­களைக் கொண்ட பல்­குழல் பீரங்­கியை பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

2000ஆம் ஆண்டு யாழ்ப்­பாணக் குடா­நாட்­டுக்குள் புலிகள் நுழைந்த போது தான் இரா­ணுவம் பல்­குழல் பீரங்­கி­களை வாங்­கி­யது.

இப்­படி போரில் பல ஆயு­தங்­களை இரா­ணு­வத்­துக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வரே பிர­பா­கரன் தான்.

ஆயுத தள­பா­டங்­களை மாத்­தி­ர­மன்றி, பல போர் உத்­தி­க­ளையும் பிர­பா­க­ர­னிடம் இருந்தே, இலங்கை இரா­ணுவம் பெற்றுக் கொண்­டி­ருக்­கி­றது.

விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டித்த- நான்­கா­வது கட்ட ஈழப்­போரில் இலங்கை இரா­ணுவம் பயன்­ப­டுத்­திய பெரும்­பா­லான உத்­திகள் விடு­தலைப் புலி­க­ளிடம் இருந்து கற்றுக் கொண்­டவை தான்.

பின்­தளப் பகுதி வரை ஊடு­ருவிச் சென்று நிலை­யெ­டுத்த பின்னர் தாக்­கு­தல்­களைத் தொடுப்­பது, சிறிய கெரில்லா அணி­க­ளாக இரா­ணு­வத்தைப் பிரித்து சண்­டையில் ஈடு­ப­டுத்­தி­யது என்­பன அதில் முக்­கி­ய­மா­னது.

பரந்­து­பட்ட பிர­தே­சத்தில் கிட்­டத்­தட்ட கெரில்லா பாணி­யி­லான  ஒரு அரங்­கையும், மர­பு­வ­ழி­யி­லான ஒரு அரங்­கையும் சம­நே­ரத்தில் திறந்து விட்­டி­ருந்­தது இரா­ணுவம். பிர­பா­க­ரனின் கெரில்லா போர் உத்­தி­க­ளையே இங்கு இரா­ணுவம் பயன்­ப­டுத்­தி­யது.

அதனை எதிர்­கொள்­வ­தற்கு விடு­தலைப் புலிகள் சிர­மப்­பட்­டார்கள். அது தனியே போர் உத்­தி­யுடன் தொடர்­பு­டைய பிரச்­சி­னை­யாக மாத்­திரம் இருக்­க­வில்லை.

இரா­ணு­வத்­திடம் கிடைத்­தி­ருந்த நவீன கண்­கா­ணிப்பு வச­திகள், ஆயுத விநி­யோ­கங்கள் முடக்­கப்­பட்­டமை, மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஆளணி, இரா­ணு­வத்தின் ஆட்­பலப் பெருக்கம் போன்ற, இரா­ணு­வத்தின் உத்­திக்கு எதி­ரான வியூ­கங்­களை வகுப்­ப­தற்குப் புலி­க­ளுக்குப் போதிய அவ­கா­சத்தைக் கொடுத்­தி­ருக்­க­வில்லை. அது புலி­களின் தோல்­விக்குக் கார­ண­மா­கி­யது.

எவ்­வா­றா­யினும், போர் முடிந்து எட்டு ஆண்­டு­க­ளுக்குப் பின்னர், பிர­பா­க­ர­னிடம் தான் போரைக் கற்­றுக்­கொண்டோம் என்ற உண்­மையை பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா ஒப்புக் கொண்­டி­ருக்­கிறார்.

பிர­பா­கரன் என்ற இரா­ணுவ ஆளுமை இல்­லாமல் போயி­ருந்தால் இலங்கை வர­லாற்றில் ஒரு பீல்ட் மார்­ஷலோ, சரத் பொன்­சேகா போன்ற பல நட்­சத்­திர நிலைத் தள­ப­தி­களோ உரு­வா­கி­யி­ருக்க முடி­யாது.

குறைந்த ஆளணிப் பலத்­தையும், மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஆயுத பலத்­தையும் வைத்துக் கொண்டு, ஒரு நாட்டின் இரா­ணு­வத்­துக்கே, போரைக் கற்­றுக்­கொ­டுக்கும் அள­வுக்கு பிர­பா­கரன் இரா­ணுவ மேதை­யாக விளங்­கி­யி­ருந்தார்.

இரா­ணு­வத்­திடம் இருந்தே போர் நுணுக்­கங்­களைப் பெற்றுக் கொண்டு, அதற்கு எதி­ரான வியூ­கங்­களை அவர் வகுத்தார். இரா­ணு­வத்தின் போர் நுட்­பங்­க­ளையும், மூலோ­பாயத் திட்­டங்­க­ளையும் முன்­னு­ணர்ந்து செயற்­படக் கூடிய ஆற்றல் பிர­பா­க­ர­னுக்கு இருந்­தது.

அதுவே, போரின் கடைசி நாள் வரை பிர­பா­க­ர­னுக்­காக மூன்று இலட்சம் படை­யி­னரும், அர­சியல், இரா­ணுவத் தலை­மை­களும் தலையைப் பிய்த்துக் கொண்டு அலையும் நிலையை ஏற்படுத்தியது.

இப்போது புலிகளும் இல்லை, பிரபாகரனும் இல்லை. இந்தநிலையில் தான், சரத் பொன்சேகா பிரபாகரன் இல்லாத நிலையின் பாதகத்தை உணரத் தொடங்கியிருக்கிறார் போலுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கான ஒரு மூலோபாயத் திட்டம் இதுவரை இல்லை என்று அவர் புலம்பத் தொடங்கியிருக்கிறார்.

பிரபாகரன் என்ற ஒரு மையத்தைச் சுற்றியே ஓடிப் பழகி விட்ட இலங்கைப் படையினர், அந்த மையம் வெறிதானவுடன், பலமிழக்கத் தொடங்கி விட்டது என்பதையே சரத் பொன்சேகாவின் கருத்து எடுத்துக் காட்டுகிறது.

இந்தநிலையில் இருந்து மீள்வதற்கே, அவர் தேசிய பாதுகாப்புக்கான மூலோபாயத் திட்டம் பற்றிப் பேசத்தொடங்கியிருக்கிறார். அதற்காகத் தான் அவர் பிரபாகரனை நினைவுபடுத்தியிருக்கிறார்.

ஆக, பிரபாகரனை வைத்துத் தான் எதையும் செய்யக் கூடிய நிலையில் இன்றைக்கும் இலங்கைப் படைக் கட்டமைப்பு இருக்கிறது என்பதே உண்மை.

Leave a comment