கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை 18 மணி நேர நீர்­வெட்டு!

360 0

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை 18 மணி நேர நீர்­வெட்டு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்புச் சபை அறி­வித்­துள்­ளது.

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள திருத்தப் பணிகள் கார­ண­மா­கவே நாளை காலை 8 மணி முதல் நாளைமறுநாள் அதி­காலை 2 மணி வரையில் நீர் வெட்டு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

எனவே கொழும்பு, தெஹி­வளை, கல்­கிஸ்ஸை, ஸ்ரீஜயவர்தனபுர, கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொடிகாவத்த, முல்லேரியா, கொலன்னாவ, இரத்மலானை உட்­பட சொய்சாபுர குடியிருப்பு பிர­தே­சங்­க­ளிலும் நீர் விநி­யோகம் தடைப்­ப­ட­வுள்­ளது. ஆகவே பொது­மக்கள் நீரை தேக்கி வைத்­துக்­கொள்­ளு­மாறு நீர் வழங்கல் மற்றும் வடி காலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Leave a comment