முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

366 0

மாவீரர் நாள் நிகழ்வுகளை உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கும்  நோக்கோடு முள்ளியவளை  மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

நேற்று(21) மாலை நான்கு மணிமுதல் இரவு எட்டு மணிவரை இந்த சிரமதானப்பணி நடைபெற்றது குறித்த முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில் இந்த துயிலுமில்லத்தின் ஒரு சிறு பகுதி இராணுவ நிலைகள் அற்ற பகுதியாக காணப்படுகிறது இந்த பகுதியில் மாவீரர் தினத்தை அனுஸ்ரிப்பதற்கு மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் இணைந்து துப்பரவு பணிகளை மேற்கொண்டதோடு முற்றுமுழுதாக இராணுவம் வெளியேறி எம் உறவுகளை நினைவு கூற அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவித்தனர் .

அதேவேளை இம்முறை இந்த துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் அனுஸ்ரிக்க இருப்பதால் இந்த துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோர் உறவுகளை கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலிகளை செலுத்துமாறும் பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது​.

Leave a comment