மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்படுவதாக வெளியான செய்தி புரிந்துணர்வற்றோரின் கருத்து – சிறிதரன்

257 0

மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்படுவதாக வெளியான செய்தி புரிந்துணர்வற்றோரின் கருத்துக்கள் ஆகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி – கனகபுரம் மற்றும் முழங்காவில் ஆகிய பகுதிகளில் உள்ள துயிலும் இல்லங்கள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தாவரவியல் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நாம் குறித்த இரு பூங்காக்களையும் புனர்நிர்மாணம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 1 மில்லின் ரூபாவும், பிரதமரின் அமைச்சின் கீழ் கிராம அபிவிருத்தி விசேட செயற்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபாவில் 1.5 மில்லியன் ரூபாவையும் மொத்தமாக 2.5 மில்லியின் ரூபாவினை குறித்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக வழங்கியுள்ளேன்.

இதனை ஒத்தவாறே விஜயகலா மகேஸ்வரனும் 1.5 மில்லின் ரூபாவினை இந்த அபிவிருத்தி திட்டத்திற்காக வழங்கியுள்ளார்.

இதற்கமைய மொத்தமாக 40 லட்சம் ரூபா செலவில் குறித்த இரு தாவரவியல் பூங்காக்களை அபிவிருத்தி செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

Leave a comment