மஹிந்த பதுளைக்கு விஜயம்.!

275 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எதிர்வரும் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பதுளைக்கு விஜயம் செய்யவுள்ளார். அன்றைய தினம் பதுளை “வீல்ஸ் பார்க்”  மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையையும் நிகழ்த்தவுள்ளார்.

இக்கூட்டத்தில் குமார வெல்கம, பவித்ரா வன்னியாராய்ச்சி, ரஞ்சித் சொய்ஸா, தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, ரோஹித அபே குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் கலந்து  கொள்ளவுள்ளனர். உரைகளையும் நிகழ்த்தவுள்ளனர்.

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முதல்பிரசாரக் கூட்டமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment