உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல், பதிப்பியல் பட்டயப் படிப்பு

390 0

சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பலநூறு ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பாதுகாக்கப்பட்டு வரும் ஓலைச்சுவடிகளை அறிந்து தெரிந்து கொண்டு நூலாக்கம் செய்யும்வகையில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

பட்டயப் படிப்பினை ஆர்வத்தோடு பயில மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தேர்வின் அடிப்படையில் பத்து மாணவர்களுக்கு ரூ. 3000 வீதம் திங்கள் தோறும் ஆய்வு உதவித் தொகை வழங்க  2017-2018ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு 17.12.2017 அன்று நடைபெறும்.

இப்பயிற்சிக்கான சேர்க்கைக் கட்டணம் ரூ. 2000 ஆகும். இப்பயிற்சிக்கான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு கிடையாது. விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 2017 டிசம்பர் 12ஆம் தேதி ஆகும். இதையடுத்து வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

இது குறித்து மேலும் தகவல்பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத்தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600113 (தொலைபேசி – 044-22542992) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a comment