விபத்தில் ஒரே குடும்த்தை சேர்ந்த மூவர் காயம்!

341 0

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் கறுவாக்கேணி சந்தியில் இன்று மாலை 05.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

திருகோணமலையில் இருந்து அம்பாறை நோக்கி வந்த தனியார் பஸ்ஸூம் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் வாழைச்சேனை பிரதேசத்தில் இருந்து மீறாவோடைக்குச் செல்வதற்கு கறுவாக்கேணி சந்தியால் திருப்புவதற்கு முயன்ற முச்சக்கர வண்டியில் பின்னால் வந்த பஸ் மோதியதாலயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதே வேளை அப்பகுதியில் உள்ள சில்லறைக்கடையில் பொருட்கள் வாங்கவதற்காக கடைக்கு முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தில் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த வீ.ரஜீந்திரன் (வயது – 32) அவரது மனைவி தனுஜா ரஜீந்திரன் (வயது – 27) அவர்களது மகள் தருனிஜா (வயது – 06) என்பவர்களே காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment