வவுனியா இபோச ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்!

372 0

வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை பணியாளர்கள் இன்று பொதுப் போக்குவரத்தில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

வவுனியா பஸ் நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அரசியல் அழுத்தம் காரணமாக இடமாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஒழுங்கு செய்யப்பட்டதாக வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபை பிரதேச முகாமையாளராக சேவையாற்றுகின்ற அதிகாரியின் எதேச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வௌிக்காட்டுவதும் இந்த பணி பகிஷசகரிப்பின் நோக்கமாகும் என்று பஸ் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

பணி பகிஷ்கரிப்பு காரணமாக வவுனியா இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் அனைத்தும் இன்று போக்குவரத்தில் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த பணி பகிஷ்கரிப்புக்கு இலங்கை போக்குவரத்துச் சபை வவுனியா டிப்போ ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

Leave a comment