பொலிஸ் சாரதி ஒருவர் கைது!

289 0
குடும்பப் பெண் ஒருவருடன் உறவுவைத்து வீடொன்றுக்குள் அத்துமீறினார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
“யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் குடும்ப பெண் ஒருவருடன் அவர் தொடர்பு வைத்து வந்துள்ளார். அவர்களின் உறவு தொடர்பில் அந்தப் பெண்ணின் கணவருக்குத் தெரியவந்துள்ளது.
அவர் நேற்று இரவு மனைவியிடம் தெரிந்தவற்றைக் கூறியுள்ளார். அதனால் கணவன் – மனைவி இடையே சண்டை மூண்டுள்ளது. அந்தப் பெண் கணவனுக்கு சுடுதண்ணீர் ஊற்றிவிட்டு வீட்டிலிருந்து உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
கணவன் தனது மனைவியின் கைபேசியிலிருந்து  வேறு ஒரு பெண்மூலம் பொலிஸ் சாரதிக்கு தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்தப் பெண்ணின் அழைப்பை நம்பி  பொலிஸ் சாரதி தொடர்புவைத்திருந்த பெண்ணின்  வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு பொலிஸ் சாரதிக்கு மிளாகாய் தூள் வீசி பிடித்த குடும்பத்தலைவர், அவருக்கு நல்ல பூசை வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொலிஸாரை  வரவழைத்து அவர்களிடம் பொலிஸ் சாரதியை குடும்பத்தலைவர் ஒப்படைத்தார்.
பொலிஸ் சாரதி குடும்பப் பெண்ணுடன் உறவு வைத்திருந்தமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை. குடும்பத் தலைவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார் என்ற குற்றச்சாட்டில் அவரை நீதிமன்றில் முற்படுத்துவது தொடர்பில் உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment