காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஜனாதிபதியை சந்திக்க ஜனாதிபதி செயலகத்துக்குள் சென்றுள்ளனர்

214 0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சற்று முன்னர்  ஜனாதிபதியை சந்திப்பதற்காக  ஜனாதிபதி செயலகத்துக்குள் சென்றுள்ளனர் குறித்த சந்திப்பிற்கு 8 மாவட்டங்களையும் சேர்ந்த பிரிதிநிதிகள் சென்றுள்ளனர்

இதுதொடர்பில் கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் கடந்த மாதம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம் தனியாக சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறித்த சந்திப்பின்போது பொருத்தமான திகதி அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

அதன்பிரகாரம் இன்று  நண்பகல் ஜனாதிபதியுடனான சந்திப்பினை ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்திருந்தது குறித்த சந்திப்பிற்காக தாம் செல்லவுள்ளதாகவும், குறித்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதியின் செயற்பாடானது வரவேற்க தக்கது எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்தத்தோடு . இவ்வாறு தம்மை அழைத்த ஜனாதிபதி நல்லதொரு பதிலை தருவார் என்று எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்கள்   தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a comment