மனித கொலை தொடர்பில் நபரொருவருக்கு மரண தண்டனை

252 0

சிலாபம் பகுதியில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றாவளிகள் இருவரில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, பிரிதொருவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு மாவில பகுதியில் வைத்து நண்பர் இருவர் ஒன்றிணைந்து பொல்லால் பிரிதொரு நபரை சராமாரியாக தாக்கி கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டனர்.

மாவில பகுதியை சேர்ந்த ஸ்ரீ ரத்ன புஷ்ப்ப குமார மற்றும் அதே பகுதியை சேர்ந்த சம்பத் பெரேரா ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் சந்தேக நபர்களில் பிரதான சந்தேக நபரான, புஷ்ப்பகுமார, கொலை குற்றவாளியென நிரூபிக்கப்பட்டதனை தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதோடு, அவருக்கு உதவியளித்தவருக்கு  ஒருவருட கடூழிய சிறைத்தண்டனையும்ம் ஆயிரம் ரூபா அபராதமும் செலுத்துமாறு உத்தரவிட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Leave a comment