நிறைவேற்றுப் பிரதமர் பதவி உருவாக்கப்படாது – பிரதி அமைச்சர் அஜித்

347 0
நாட்டில் நிறைவேற்று பிரதமர் பதவி ஒன்று உருவாக்கப்பட மாட்டாது என்று, பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு நாட்டுக்கு அவசியம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார்.
புதிய யாப்பில் ஒற்றையாட்சிக்கு பங்கம் ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறவில்லை.
ஏதோ காரணத்துக்காக புதிய யாப்பு, மக்கள் கருத்துக் கணிப்பில் தோல்வி அடைந்தால், மீண்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தல் இடம்பெறும்.
இதன்போது பிரதமரை சக்திமயப்படுத்தும் நோக்கில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறைமை உருவாக்கப்படும் என்று கூறப்படுவது, முட்டாள்தனமான பேச்சு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment