யானை தாக்கி யாழ் இளைஞன் பலி – 10 பேர் காயம்

346 0

3930793171182999538elephant-attck2-720x480புத்தளம் – அநுராதபுரம் வீதியின் கருவலகஸ்வேல மீஒய பாலத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் பலியானார்.

சம்பவத்தில் மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை 2.20 அளவில், சிற்றூர்தி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் மீது இவ்வாறு காட்டு யானை தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

சம்பவத்தில் யாழ்பாணத்தைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பெண்கள் மற்றும் 8 ஆண்கள் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

பலியானவரின் மரண விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளது.