மு.க.ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜு

354 0

தமிழகத்தில் மு.க.ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது என தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகின்ற 22-ம் தேதி நடைபெறுகிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதையொட்டி இன்று தருவை மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டியை அமைச்சர் கடம்பூ ராஜு தொடங்கி வைத்தார். போட்டி தருவை மைதானத்தில் தொடங்கி ரோச் பூங்கா வழியாக துறைமுகம் ரெயில்வே கேட் வரை சென்று மீண்டும் தருவை மைதானத்தில் முடிந்தது.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அனைத்து பகுதியிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மழை வந்தாலும் வறட்சி ஏற்பட்டாலும் ஆட்சி கவிழ வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அவர் தமிழகத்தில் முதலமைச்சராக வேண்டும் என நினைக்கிறார். அவர் கனவு மட்டும்தான் காணமுடியும். அவரால் தமிழகத்தில் முதலமைச்சராக முடியாது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Leave a comment