புதையல் ஒன்றிலிருந்து 300 கிராம் எடையுடைய மாணிக்கக் கல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
நவகத்தேகம – வன்னியாகம காட்டுப் பகுதியில் இந்தப் புதையல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாணிக்கக் கல்லை நவகத்தேகம பொலிஸார் மீட்டுள்ளனர்.
புதையல் தோண்டியதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் ஆனமடுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
மீட்கப்பட்ட பாரிய மாணிக்கக் கல்லின் பெறுமதியை மதிப்பீடு செய்ய, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைக்கு, கல்லை அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆனமடுவ நீதவான் சுனில் ஜயவர்தன இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.