உயிரிழந்த தாயின் சடலத்துடன் இரண்டு நாட்களாக தனிமையில் இருந்த குழந்தை

306 0

22 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொட, மாதம்பாகம, இடம்தொட்ட பிரதேசத்தில் வசிக்கும் விமுசிகா தில்கானி என்ற ஒன்றரை வயது குழந்தையுடைய இளம் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் கணவர் மீன்பிடி தொழிலில் ஈடுபடக்கூடியவர் என்பதுடன், கடந்த நவம்பர் மாதம் 01ம் திகதி அவர் மீன்பிடி நடவடிக்கைக்காக காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் மின்பிடிக்காக சென்றுள்ளார்.

கணவர் வீட்டில் இல்லாத காரணத்தால் தனது தாயின் வீட்டிற்கு சென்று சிறிது நாட்கள் தங்கியிருந்து விட்டு கடந்த 07ம் திகதி மாலை 6.00 மணியளவில் மீண்டும் வீடு திரும்பிய பெண், தாயிடம் தொலைபேசியூடாக வீடு வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

பின்னர் கடந்த 08 மற்றும் 09ம் திகதிகளில் உயிரிழந்த பெண்ணிடம் இருந்து எவ்வித தொலைபேசி அழைப்புக்களும் கிடைக்காத காரணத்தால், உயிரிழந்த பெண்ணின் தாய் கடந்த 09ம் திகதி மாலை 4.30 மணியவில் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மூடப்பட்டிருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை உயிரிழந்த பெண்ணுக்கு அருகில் உள்ள கட்டிலில் இருப்பதை கண்ட உயிரிழந்த பெண்ணின் தாய் அதிர்ச்சியடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொட பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் மூக்கில் இருந்து இரத்தம் வடிந்துள்ள அதேவேளை வேறு எவ்வித காயங்களும் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment