புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் விடயத்தில் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை மெதடிஸ்த தேவாலயம் கோரியுள்ளது.
இந்த அரசியலமைப்பை தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு அப்பால் இந்த ஒத்துழைப்பு வழங்கப்படவேண்டும் என்று தேவாலயம் கேட்டுள்ளது.
மெதடிஸ்த தேவாலய தலைவர் வணக்கத்துக்குரிய தந்தை ஆசிரி பெரேரா இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் வாக்களித்தமையானது அரசியல் அமைப்பை உருவாக்குதன் நோக்கத்திலேயாகும்.
அத்துடன் அடுத்து வந்த பொதுத்தேர்தலிலும் மக்கள் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்துக்காகவே வாக்களித்தனர் என்று ஆசிரி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இதனை யாரும் மறக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.