முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட மிதிவெடிகள் வெடிக்க வைக்கப்பட்டு அழிக்கப்பட்டன

4729 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட முள்ளிவாய்கால் கிழக்கு பகுதியில்நேற்று முன்தினம் (7) 5 0 மிதிவெடிகள் மீட்கப்பட்டன இந்த மிதிவெடிகள் விசேட அதிரடிப்படையினரால் இன்று வெடிக்க செய்து அழிக்கப்பட்டது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட முள்ளிவாய்கால் கிழக்கு பகுதியில் பாக்கியநாதன் மரியமலர் என்பவருடைய காணியில் அவர் வசிக்கும் வீட்டிற்கு முன்னாள் கொட்டில் ஒன்றை அமைப்பதற்காக நிலத்தை தோண்டும் போது மிதிவெடிகள் இருப்பதை அவதானித்ததை தொடர்ந்து இந்த தகவலை இராணுவத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

உடனே குறித்த பகுதிக்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் இருந்து 5 0 மிதிவெடிகளை மீட்டிருந்தனர் அதனடிப்படையில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் இன்று வெடிக்க செய்து அழிக்கப்பட்டது.

Leave a comment