எழிலன் உள்ளிட்ட 12 பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வழக்கு இன்று

4594 0

இறுதிப்போரின் போது வெள்ளைக்கொடியுடன்  சரணடைந்து காணாமல் போக செய்யப்பட்ட திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளர்  எழிலன் உள்ளிட்ட  12 பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வழக்கு இன்று(9) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்றது

இதில் எழிலன் உள்ளிட்ட ஜவர் தொடர்பான வழக்கு நடைபெற்று வந்துள்ள நிலையில் அதன் எழுத்துமூலமான அறிக்கை இன்று நீதிமன்றில் சட்டவாளர் கே.எஸ்.ரட்ணவேல் கையளித்துள்ளார்.

அத்தோடு எழிலன் உள்ளிட்ட 5 பேரின் வழக்கு தொடர்பான அறிக்கை வவுனியா  மேல் நீதிமன்றுக்கு அனுப்பப்படவுள்ளது

அடுத்த கட்டமாக மீதி 7பேரினதும் ஆட்கொணர்வு மீதான வழக்கு விசாரணை ஜனவரி 2018 ஆம் ஆண்டு 4 ஆம் திகதி க்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் பதில் நீதிபதி சுதர்சன் தலைமையில் இன்று  வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.குறிப்பிடத்தக்கது.

Leave a comment