உணவு தவிர்ப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது

315 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை  தடைசெய்ய வேண்டும் என கோரி அரச மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்த உணவு தவிர்ப்பு போராட்டம்  நேற்று இரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

அவர்களின் கோரிக்கை தொடர்பில் எழுத்து மூல மற்றும் வாய்மூல உறுதிமொழி, பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வாவினால், வழங்கப்பட்டது.

இதனை அடுத்து அவர்களின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

கடந்த  6ஆம்  திகதி மாலை மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தினால் உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment