நீர்மின் உற்பத்தி  40 சதவீதமாக அதிகரிப்பு

294 0

நீர்மின் உற்பத்தி  40 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் புத்தாக்கல் சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

காசல்ரீ, மவுசாகலை, விக்டோரியா, கொத்மலை, சமனலவௌ மற்றும் ரந்தெனிகல ஆகிய  நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய தினமும் நாட்டில் பல பாகங்களில் மழையுடனான காலநிலை நிலவும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ, தென், ஊவா ஆகிய மாகாணங்களில் 100 மில்லிமீட்டர்  வரையிலான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment