இந்திய மீனவர்கள் 4 பேர் கைது

236 0

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இன்று அதிகாலை குறித்த 4 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்கள் சிலவும் மற்றும் அவர்கள் பயணித்த படகும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்த கோட்டைப்பட்டிணத்தைச் சேர்ந்த 4 மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று யாழ் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

Leave a comment