யேர்மனி வூப்பெற்றால் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழிச்செல்வன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

786 0

5.11.2017 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி வூப்பெற்றால் நகரில் பிரிகேடியர் தமிழ் செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்களுடன் நடைபெற்றது. ஈகைச்சுடர் மற்றும் தேசியக்கொடி ஏற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்;வில் பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின் துணைவியார் அவர்கள் கலந்துகொண்டு பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தார். அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மற்றைய ஐந்து மாவீரர்களுக்கும் மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் செயற்பாட்டாளர்களும் மாலை அணிவித்து சுடர்வணக்கமும் செய்தனர்.

பின் மண்டபம் நிறைந்த மக்கள் வரிசையாகவந்து திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர்தூவி தங்கள் வணக்கத்தைத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இசைவணக்கமும் கவிதை மற்றும் சிறுவர்களின் பேச்சு உட்பட இன்னும் பல நிகழ்வுகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

Leave a comment