பேராதனை பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மாணவர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியா சாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியினைச் சேர்ந்த பேரதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு சிகிச்சை பெற்றுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இரவு வழமை போன்று பேராதனை பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட தமிழ் மாணவர்களும், முஸ்லீம் மாணவர்களும் அங்குள்ள குறிஞ்சிக் குமரன் ஆலயத்திற்கும், மசூதிக்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு விட்டு தங்குமிடங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இதன் போது இம் மாணவர்களை வழிமறித்த சிங்கள மாணவர்கள் அவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். இச் சம்பவத்தில் பல மாணவர்கள் இரத்தக்காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
இத் தாக்குதல் சம்பவத்தினை அடுத்து குறித்த பல்கலைக்கழகத்தின் தமிழ், முஸ்லீம் மாணவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு உள்ளாக்கப்பட்ட யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியினைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
இங்கு வந்த அவர் தலையில் ஏற்பட்ட நோ காரணமாக யாழ்.போதனா வைத்திய சாலையில் கடந்த செவ்வாக்கிழமை சிகிச்சைககாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 3 தினங்களாக வைத்திய சாலையில் தடுத்து வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் அம் மாணவர் நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார் என்று யாழ்.போதனா வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- Home
- முக்கிய செய்திகள்
- பேராதனையில் பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்ட தமிழ் மாணவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

