ஹெம்மாத்தகமவில் மட்டும் எரிபொருள் பற்றாக்குறையில்லை

249 0

நாடளாவிய ரீதியாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில் ஹெம்மாத்தகம எரிபொருள் நிலையத்தில் வழமையாக எரிபொருள் கிடைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற்றும் நோக்கில் கேகாலை, கம்பளை, மாவனெல்லை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் வாகனங்கள் வந்து செல்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அரணாயக்க, மாவனெல்லை, கேகாலை உள்ளிட்ட பிரதேசங்களில் தற்போதைய நிலையில் எரிபொருள் தீர்ந்து போயுள்ள நிலையில் ஹெம்மாத்தகம நிரப்பு நிலையத்தில் மாத்திரம் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய நாளுக்கு போதுமான அளவு அங்கு எரிபொருள் இருப்பதாக நிலையத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment