பௌத்த துற­வி­களே இன­வா­தத்தை பரப்பி வரு­கின்­றனர்- சந்­தி­ரிகா

275 0

நாட்டில் நல்­லி­ணக்­கத்தை நிலை­நாட்ட அர­சாங்­கத்­தினால் மாத்­திரம் முடி­யாது. இதற்­காக சகல இன மக்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வேண்டும். அத்­துடன் 2013ஆம் ஆண்­டில் நாட்டில் மத­வாதம் மிகத்­தீ­வி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டது. பௌத்த துற­விகள் என்று சொல்­லக்­கூ­டி­ய­வர்­களே நாட்டில் பல்­வேறு இடங்­களில் இன­வா­தத்தை பரப்பி வரு­கின்­றனர் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் தேசிய ஒரு­மைப்­பாடுமற்றும் நல்­லி­ணக்க அலு­வ­ல­கத்தின் தலை­வ­ரு­மான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க கவலை தெரி­வித்தார்.

தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும்  நல்­லி­ணக்க அலு­வ­ல­கமும் தேசிய ஐக்­கி­யத்­திற்­கான பாக்கீர் மாக்கார் நிலை­யமும் இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த “ஒற்­று­மையில் வேற்­று­மையே தேசத்தின் பலம்” என்னும்தொனிப்­பொ­ருளில் அகில இலங்கை ரீதி­யி­ல் பாடசாலை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்­டுரை மற்றும் சித்­தி­ரப்­போட்­டியில் வெற்­றி­பெற்ற மாண­வர்­க­ளுக்கு சான்­றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்­தினம்பண்­டாரநாயக்க ஞாப­கார்த்த சர்வதேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இந்நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், வேற்­று­மையில் ஒற்­றுமை காண்­பதும் சக­வாழ்வும் எமது நாட்­டிற்கு அத்­தி­யா­வ­சி­ய­­மான விட­யங்கள். எமது நாட்டில் வாழும் பல்­லின மக்­க­ளுக்­கி­டையில் சமா­தா­னத்தை கட்­டி­யெ­ழுப்ப நான் என் வாழ் நாளில்  அரை­வாசிப் பகு­தி­யையும் கழித்­துள்ளேன். பல்­வேறு அர்ப்­ப­ணிப்­புக்­களை செய்­துள்ளேன்.

எமது நாடு சிறி­ய­தொரு வள­மா­ன­தொரு நாடு. கலா­சா­ரத்­திலும் நாக­ரி­கத்­திலும் உன்­ன­த­மா­ன­தொரு வர­லாற்றை கொண்­டுள்­ளது. 2000 ஆண்டுகளுக்கு அதிக காலம் தொட்டு சிங்­கள, முஸ்லிம், தமிழ் மக்கள்இங்கு வாழ்ந்­துள்­ளார்கள். அதன் பின்னர் பல்­வேறு இனங்கள் இங்கு வந்­துள்­ளன. பல தசாப்­தங்­க­ளாக எவ்­வித பிள­வு­களும் இன்றி நாம் ஒற்­று­மை­யாக வாழ்ந்­த­தற்­கான வரலாற்று ஆதா­ரங்கள் உள்­ளன.

தென் இந்­தி­யாவில் பல்­வேறு ராஜ்­ஜி­யங்கள் காணப்­பட்­டன. அங்­கி­ருந்து பல்வேறு அர­சர்­களும் இங்கு வந்து எமது நாட்டை கைப்­பற்­றப்­பார்த்­தார்கள். ஆனால் ஆக்­கி­ர­மிப்பு சக்­தி­க­ளி­ட­மி­ருந்து நாட்டை காப்­பாற்ற நாம் எல்­லோரும் போரா­டி­யுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a comment