விபத்தில் மூவர் பலி

343 0

மினுவாங்கொட 18வது மைல்கல் பகுதியில் டிரக் வண்டியொன்று வீதியை விட்டு விலகி இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயரிழந்துள்ளனர்.

மேலும் 3 பேர் காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

டிரக் வண்டியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதிக்கு அருகில் இருந்த உயர் மின்னழுத்த தூணில் மோதி அங்கிருந்த மின்மாற்றி டிரக் வண்டியில் விழுந்துள்ள நிலையில், டிரக் வண்டியின் முன்னால் பயணித்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் மூவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் மஹவ, நாவலபிட்டி மற்றும் மாத்தளை பிரதேசங்களை சேர்ந்த 26, 27 மற்றும் 54 வயதானவர்கள் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

Leave a comment