இந்திய மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

284 0

இந்திய மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் ஒன்பது பேர் மற்றும் இராமநாதபுரத்தை சேர்ந்த நான்கு பேரும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீ்ன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், குறித்த 13 பேரையும் கைதுசெய்துள்ளனர் என, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

மேலும், அவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a comment