வித்தியா படுகொலை வழக்கு : பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சிப்பட்டியலில் இல்லை

376 0

சிவ­லோ­க­நாதன் வித்­தியா படு­கொலை வழக்கில் முத­லா­வது சந்­தே­க ந­ப­ராக இருந்து விடு­தலை செய்­யப்­பட்ட நபர், அச்­சு­றுத்­திய பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் குறித்த மாண­வியின் கொலை வழக்கின் ட்ரய­ல் அட்பார் நீதி­மன்ற வழக்­கேட்டின் சாட்சிப் பட்­டி­யலில் சாட்­சி­யாக இல்லை என ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்று தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளது.

குறித்த மாண­வியின் கொலை வழக்கில் முத­லா­வது சந்­தே­க­ ந­ப­ராக கைது செய்­யப்­பட்ட பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­குமார் ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்ற வழக்கு நட­வ­டிக்­கை முடி­வ­டைந்து வீடு வரும்­போது தன்னை தேவை­யில்­லாது கோபி என்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் கைது செய்து விட்­ட­தாக கூறி அச்­சு­றுத்தும் தொனியில் பேசி­யி­ருந்தார்.

இது தொடர்­பான செய்­தி­களை சில ஊட­கங்கள் வெளி­யிட்­டி­ருந்­த­துடன் சாட்­சி­களை அச்­சு­றுத்­தி­யமை என்ற குற்­றச்­சாட்டில் இவ­ருக்கு எதி­ராக ஊர்­கா­வற்­றுறை பொலிஸார் பிறி­தொரு வழக்கை தாக்கல் செய்­தி­ருந்­தனர். இதன்­பின்னர் வித்­தியா கொலை வழக்கில் இருந்து குறித்த நபர் நிர­ப­ராதி என ரய­ல் அட்பார் நீதி­மன்றால் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்ட பின்­னரும் சாட்­சி­களை அச்­சு­றுத்­திய வழக்கில் விளக்­க­ம­றி­யலில் இருந்து வரு­கின்றார்.

இவ்­வா­றான நிலையில் குறித்த வழக்­கா­னது நேற்று முன்தினமும் ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்­னி­லையில் விசா­ர­ணைக்­காக எடுத்­து ­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

குறித்த சந்­தே­க­ நபர் அச்­சு­றுத்­திய பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் வித்­தியா கொலை வழக்கின் ட்ரய­ல் அட்பார் நீதி­மன்ற குற்­றப்­ப­கிர்வு பத்­தி­ரத்தின் சாட்­சிகள் பட்­டி­யலில் உள்­ளாரா என்­பது தொடர்­பாக அறிந்து கொள்­­வ­தற்­காக அச் சாட்­சிகள் பட்­டியல் பிர­தி­யா­னது ட்ரய­ல் அட்பார் நீதி­மன்­றிடம் பெற்­றுக் ­கொள்­ளு­மாறு ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்றம் முன்னர் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

இதன்­படி குறித்த சாட்­சிகள் பட்­டியல் பிர­தி­யா­னது நேற்று முன்தினம் மன்றில் சமர்­ப்பிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் அச் சாட்சிப் பட்­டி­ய­லினை ஆராய்ந்த மன்று குறித்த நபர் அச்­சு­றுத்­திய பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் சாட்­சி­யாக இணைக்­கப்­ப­ட­வில்லை என மன்று தெரி­வித்­தது. அதனைத் தொடர்ந்து குறித்த நப­ருக்கு எதி­ரான வழக்கு விசா­ரணை அறிக்­கையை அடுத்த தவணை மன்­றுக்கு சமர்­ப்பிக்­கு­மாறு நீதிவான் ஊர்­கா­வற்­றுறை பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

மேலும் இவ் வழக்கு விசாரணையை எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி வரை ஒத்தி வைக்கவும் அதுவரை குறித்த நபரை விளக்கமறியலில் வைக்கவும் ஊர்கா வற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டிருந்தார்.

Leave a comment