கல்வியல் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைப்பதற்கான வர்த்தமானி நவம்பர் 2இல் வெளியாகும்

263 0

2017ஆம் ஆண்டுக்கான, கல்வியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் நாளை மறுதினம் ( நவம்பர் 02) ஆம் திகதி வெளியிடப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய 2015 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக 27 பாடங்களுக்கான 4745 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கான விண்ணப்பங்கள் நவம்வர் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்படவேண்டும் எனக் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a comment