இந்தோனேசியாவின் “பிம் சுகி” கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

284 0

இந்தோனேசியாவின் கடற்படைக்கு சொந்தமான “பிம் சுகி” எனும் பாய்மரக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு நற்புரீதியான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் மற்றும் அக்கப்பலின் உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் கடற்படை தலைமையகத்தில் புதிதாக கடற்படை தளபதியாக பதவியேற்ற வைஸ் அட்மிரால் ஸ்ரீமேவன் ரணசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.

மூன்று நாள் பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தோனேசிய கடற்படடை வீரர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்படும் நற்புரீதியான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து விட்டு இந்தக் கப்பல் எதிர்வரும் 02 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment