293 0

அரசியல் அமைப்பு சீர்த்திருத்த குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் நாடாளுமன்ற விவாதம் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை அரசியல் அமைப்பு பேரவை கூடியது.

அரசியல் அமைப்பு வழிநடத்திற்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ஜனம்பதி விக்ரமரத்ன உரையாற்றும் போது, ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக அவருடைய உரைக்கு இடையூறு செய்து வந்தனர்.

இந்தநிலையில், ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைவர் தினேஸ்குணவர்தன, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.

விவாதம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

Leave a comment