பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

291 0

கண்டி – அங்கும்புர பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார். 

இவர் தனது கடமைகளை நிறைவு செய்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தாக்குதலுக்கு இலக்கான நபர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அங்கும்புர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment