நீர்வீழ்ச்சிகளை அண்மிக்க வேண்டாம்! நீர்வீழ்ச்சிகள் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை

317 0

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள நீர் வீழ்ச்சிகளை அண்மிக்கவோ நீராடவோ வேண்டாமென மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்தினங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் தொடரும் மழையினால் இந்த ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நீர்வீழ்ச்சி பாதுகாப்பு அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

இம்மாவட்டத்தில் குறிப்பாக சிவனொலிபாத மலை வீதியில் உல்லாச பயணிகளை கவரும் கவர்ச்சியான பல நீர் வீழ்ச்சிகள் காணப்ப டுகின்றன. ஆனால் இப்பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக இவற்றில் நீர் அதிகரித்து நீரோட்டமும் வேகமடைந்துள்ளது. அத்துடன் நீர் வீழ்ச்சிப்பகுதியிலும் அண்மித்த பள்ளத்தாக்கான பகுதிகளிலும் அமைந்துள்ள கற்பாறைகள் வழுக்கள் தன்மையிலுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இந்த ஆபத்தான சூழ்நிலையில் இந்நீர்வீழ்ச்சியில் நீராடுவதோ அண்மித்த கற்பாறைகளில் நடமாடுவதோ ஆபத்தான விடயமாக  அமையலாமென்பதால் இப்பகுதியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு இவ்வமைப்பு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள் ளது.

Leave a comment