தேர்தல் பிற்போடப்படுவதற்கு ஸ்ரீ ல.சு.க. காரணம் அல்ல- மஹிந்த

416 0

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வருவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் காரணமல்லவெனவும், சில கட்சிகளின் தயார் நிலையற்ற நிலைமையே காரணம் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புதிய தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை முகம்கொடுக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளது. ஏனைய சிலரே பழைய முறையில் தேர்தலை நடாத்த முயற்சித்து வருகின்றனர். இதற்காகவே தேர்தல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தேர்தல் தாமதமாவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொறுப்புக் கூற வேண்டும் எனத் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment