புதிய இனங்­கள் தொடர்­பான ஆராய்ச்­சி­க­ளின் மூல­மாக 3 வகைப் பயி­ரி­னங்­கள் கண்­ட­றி­யப்­பட்டுள்ளது!

323 0

விவ­சாய ஆராய்ச்சி நிலை­யங்­க­ளில் புதிய இனங்­கள் தொடர்­பான ஆராய்ச்­சி­க­ளின் மூல­மாக 3 வகைப் பயி­ரி­னங்­கள் கண்­ட­றி­யப்­பட்டு தற்போது விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றன.

மேலும் பல இனங்­க­ளைப் பெற்­றுக்­கொ­டுக்­கும் நோக்­கில் நட­வ­டிக்கைகள் இடம்­பெ­று­கின்­றன என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்­பில் மாகா­ணப் பிரதி விவ­சா­ யப்­ப­ணிப்­பா­ளர் அ.செல்­வ­ராசா மேலும் தெரி­வித்­த­தா­வது:

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் புதிய விவ­சாய பயிர் இனங்­க­ளைப் பயி­ரி­டு­வ­தற்கு விவ­சா­யி­கள் ஆர்­வம் காட்­டி­வ­ரு­கின்­ற­னர்.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உள்ள விவ­சா­யி­கள் அதிக விளைச்­ச­லைத் தரக்­கூ­டிய விவ­சா­யப் பயிர்­க­ளைப் பயி­ரி­டு­வ­தில் ஆர்­வ­மாக உள்­ள­னர். நாம் புதிய இனங்­களை விவ­சா­யி­க­ ளுக்கு அறி­மு­கம் செய்து அவற்றை பரீட்­சார்த்த நட­வ­டிக்கையின் பின்­னர் விவ­சா­யி­க­ளுக்கு வழங்கி வரு­கின்­றோம்.

நடப்பு வரு­டத்­தில் இது­வரை மூன்று வகை­ யான விவ­சா­யப் பயிர்­களை அறி­மு­கம் செய்­துள்­ளோம். இவ்­வா­றான புதிய இனங்­களை வெளி­யி­டங்­க­ளில் இருந்து பெற்­றுக்­கொ­டுப்­பதற்­குச் செலவு அதி­கம்.

எனி­னும் இழைய வளர்ப்பு மூல­மா­கப் பெறப்­பட்ட “கவண்­டிஸ் “ இன வாழைப்­ப­ழச் செய்கை பெரும் வெற்­றி­ய­ளித்­துள்­ளது. இது வாழை ஆய்வுக் கூடத்­தில் வளர்க்­கப்­பட்டு மிகச் சிறிய அள­வில் காணப்­ப­டும்.

அது 10 மாத காலத்தில் அதிக எடை­யுள்ள குலை­போ­டும். எந்தவித நோய்த் தாக்­கத்­துக்­கும் உள்­ளா­காத வாழை­ம­ர­மாக இது காணப்­ப­டு­கி­றது.

பழம் சிறிது வளைந்த, பச்சை நிற­மா­கக் காணப்­ப­டு­கி­றது. இத­னால் பொதி செய்து ஏற்­று­மதி செய்­வது சுல­பம். இதன் விளைச்­சல் அதி­கம் என்­ப­தால் விவ­சா­யி­கள் இந்த வகை வாழை மரத்தை அதி­கம் கொள்­வ­னவு செய்ய முன்­வந்­துள்­ள­னர்.

வடக்­கில் பல விவ­சா­யி­கள் இத­னைப் பெற்­றுக்­கொண்­டுள்­ள­னர். இது தவிர அதிக விளைச்­சல் தரக்­கூ­டி­ய­தும், நோய் எதிர்ப்பு சக்தி உடை­­ய­து­மான புதிய இன மிள­காய் மற்­றும் சோளம் விதை­களையும் அறி­மு­கம் செய்­துள்­ளோம்.

இதில் சிறப்­பான அம்­சம் நாட்­டில் உள்ள “மகா இலுப்ப­ல்லம, “ஆராய்ச்சி நிலை­யத்­தில் இந்த விதைகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டமை.

இவற்றைப் பரி­சீ­லித்­துப் பார்ப்­ப­தற்­காக அண்­மை­யில் நடை­பெற்ற தேசிய உணவு உற்­பத்தி வார நிகழ்­வில் வைத்து நூறு பேருக்கு வழங்­கி­யுள்­ளோம்.

அத­னைத் தற்­போது விவ­சா­யி­கள் பயி­ரிட்­டுள்­ள­னர். விளைச்­ச­லின் பின்­னர் அவை பார்­வை­யி­டப்­பட்டு அது பய­னுள்ள விதை­க­ளாக இருந்­தால் விவ­சா­யி­க­ளின் தேவை­க­ளுக்­கேற்ப அதனை அதி­க­மா­கப் பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்படும் என்­றார்.

Leave a comment